Monday 10 October 2011

ஏசி அறைக்குள் வறுமைக்கோடு போடுபவர்கள்


அரண்மனைக்குள்ளேயே அடைந்து கிடந்த மன்னன் மந்திரியைப் பார்த்து கேட்ட கேள்வி மந்திரியாரே நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா?காலம்தொறும் கிண்டலாக பேசப்படும் கேள்வி.

மேலிடத்து உத்தரவுப்படி மக்களைப் பற்றிய விவரங்களை திரட்டி தர வேண்டியது சில அலுவலகங்களின் வேலை. அங்கு பணிபுரிபவர்கள் அந்த  விவரங்களை சேகரிக்க அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார்கள்.. அலுவலகத்தில் அவர்கள் “கேம்ப்(camp) சென்று இருப்பதாகச் சொல்லுவார்கள்.. சில சமயம் போக முடியாவிட்டால் சென்ற மாத கணக்கையே கொஞ்சம் மாற்றி அனுப்பி வைப்பார்கள். பழைய கணக்கையே அனுப்பி வைத்தல் என்பது எல்லா துறைகளிலும் உண்டு. நாடு முழுக்க இவ்வாறு விவரங்கள்  திரட்டப்படும். ( சில சமயம் சில குறிப்பிட்ட சர்வேக்களை தனியாரிடம் ஒப்படைப்பார்கள்.) இவர்கள் கொடுக்கும் விவரங்களை வைத்துதான் நலத் திட்டங்கள் தீட்டப்படும். இந்த விவரங்கள் நடைமுறை வாழ்க்கையில் உண்மையானவையா, எதார்த்தமானவையா, சரியானவையா என்று மேலிடத்தில் யாரும் சரி பார்ப்பது கிடையாது.அவர்களுக்கு வேண்டியது ஒரு பட்டியல்.

இவர்களைப் போன்றவர்கள் கொடுக்கும் விவரங்களை வைத்து தான் மேல் மட்டத்தில் அதிகாரிகள் சில நிர்ணயங்களைச் செய்கின்றனர். இலவச பொருட்களை வாங்க குடும்ப தலைவரின் மாத வ்ருமானம், மாணவர்கள் ஸ்காலர்ஷிப் வாங்க பெற்றோர் ஆண்டு வருமானம், வருமானவரி உச்ச வரம்பு, அரசு ஊழியர் சம்பளம் மற்றும் அகவிலைப் படி, வரி விதிப்புகள்,பெட்ரோல் டீசல் மண்னெண்ணெய் விலை உயர்வுகள்- என்று எவ்வளவோ நிர்ணயங்கள்.அதேபோல மான்யம் தரலாமா வேண்டாமா, இலவச பொருட்கள் எவ்வளவு பேருக்கு கொடுக்க வேண்டும்,எவ்வளவு வாங்க வேண்டும் என்றும் முடிவு செய்வார்கள்.

உண்மையில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள்?உண்மையில் என்ன பிரச்சினை? வெளியில் என்ன நடக்கிறது?இந்த வரையறைகள் சரியானவைகளா என்று சிந்திப்பதே கிடையாது.வெளியில் இறங்கி வந்து மக்களோடு மக்களாய் பழகி தெரிந்து கொள்வதும் கிடையாது. ஏசிஅறைக்குள் உட்கார்ந்து கொண்டு நாங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று செயல் படுகிறார்கள்.சமீபத்தில் இவர்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து கொண்டு செய்த நிர்ணயம்வறுமைக் கோட்டுக்கான வரம்பு 32 ரூபாய் என்பதாகும். அதாவது நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ32-ம் (அதாவது மாதம் ரூ960) கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ26-ம் (அதாவது மாதம் ரூ780) செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள். மற்றவர்கள் வசதியானவர்கள். அதாவது இந்தியாவில் ஏழைகளே இல்லை. சித்தாள்,கொத்தனார்,பெயிண்டர், கூலிவேலை செய்பவர் (இன்னும் எத்தனையோ பேர்) எல்லோரும் வசதியானவர்கள்.

இவர்கள் போட்ட கோட்டினால் என்ன நடக்கும்? குழப்பமும், குளறுபடிகளும்தான் மிஞ்சும்..

4 comments:

  1. வணக்கம்!சென்னை பித்தன் அவர்களது வருகைக்கு நன்றி

    ReplyDelete
  2. உண்மையை தெளிவாக உரைத்து விட்டீர்
    உணர்வார்களா..?
    நல்ல பதிவு அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete